பருவமழைக் காலத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவது எப்படி?

இன்று முதல் (நவம்பர் 1) டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இக்காலத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவது எப்படி என கோவை போக்குவரத்து காவல் துணை ஆணைய‌ர்  சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.


அவர் கூறுகையில்:- 
மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கு,  பிரேக்,  கிளட்ச்,  டயர் மற்றும் வைப்பர் போன்றவை நன்கு இயங்கும் நிலையில் உள்ளதா என்று பரிசோதிப்பது அவசியம். மழையின் போது வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மழை பெய்யும் போது நம்மால் சாலையை தெளிவாக பார்க்க முடியாது. தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகளில் மிக மெதுவாக வாகனத்தை செலுத்த வேண்டும். மழையால் ஏற்பட்ட சேதம், மழைநீரால் அடித்து வரப்பட்ட பொருட்கள் மற்றும் மூழ்கியுள்ள வேகத்தடைகளால் விபத்து நேரிடலாம். சாலையின் மையப்பகுதியில் பயணிப்பது பாதுகாப்பானது. 


தரைப்பாலங்களின் மேல் வெள்ளம் செல்லும் போது அதனை கடக்க முயற்சிக்க வேண்டாம். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் காவல்துறை மேற்கொள்ளும் தடை மற்றும் போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைக்க வேண்டும். சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பது, மரம் விழுந்து கிடப்பது,  மின்சார கம்பிகள் அறுந்து கிடப்பது மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100ல் தகவல் தெரிவிக்கலாம். மேலும், கோவை மாநகர பொதுமக்கள் 8190000100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார். வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...