காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: ராணுவ வீரர் உட்பட 2 பேர் பலி

காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி உட்பட பல பகுதிகளில், பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நேற்று தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

காஷ்மீர் எல்லையில் இந்திய வீரர் மான்ஜீத் சிங்கை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று உடலைத் துண்டாக்கினர். இதில் அதிர்ச்சி அடைந்த ராணுவத்தினர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது 2 நாட்களுக்கு முன்னர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 4 முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள மென்தாம் செக்டார் மற்றும் ரஜோரி பகுதி யில் மன்காட், பாலாகோட் ஆகிய இடங்களில் எல்லைக் கட்டுப் பாட்டு கோட்டருகே நேற்று காலை 9 மணியளவில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்

மேலும், சிறிய ரக 120 மி.மீ., மற்றும் 82 மி.மீ. பீரங்கி குண்டுகளை இந்தியப் பகுதியில் வீசி தாக்குதல் நடத்தினர்.இரு தரப்புக்கும் இடையில் பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ரஜோரி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் பிமல் தமாங்(20) என்ற ராணுவ வீரர் பலியானார். மேலும் தவ்ஸீர் பீ(50) என்ற பெண்ணும் பலியானார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...