கோவை ரைபில் கிளப்பை மேம்படுத்தும் முயற்சி தீவிரம்- காவல் ஆணையர்

கோவை பிஆர்எஸ் காவல் பயிற்சி மைதானத்தில் கடந்த 1956ம் வருடம் முதல் ரைபில் கிளப் இயங்கி வருகிறது. அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், பிஆர்எஸ் ரைபில் கிளப்பை மேம்படுத்தப்பட உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:- 

''இந்த ரைபில் கிளப்பில் 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 70 பேர் நிரந்திர உறுப்பினர்களாவர். நிரந்திர உறுப்பினர்களுக்கு வைப்புத் தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. அதுபோக மாணவ, மாணவிகளும் 125 பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால், இத்தகைய பெரிய தொகையினை அவர்கள் கட்ட முடியாது என்பதால் பள்ளி மாணவ, மாணவிகளிடம் குறைந்த கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. 

ரைபில் கிளப் 70 மீட்டர் நீலமும், 30 மீட்டர் அகலமும் கொண்டது. மொத்தம் 22 ஆயிரம் சதுர அடி அளவுக்கு ரைபில் எல்லை தற்போது உள்ளது. துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் போட்டிக்கு இது போதுமானதாக இல்லை. அதனால், பிஆர்எஸ் மைதானத்தில் உள்ள ரைபில் ரேஞ்சை பெரிதுபடுத்த அரசு நிதிக்கு விண்ணப்பித்துள்ளோம். இது கிடைத்தவுடன் விரைவில் பணி தொடங்கி விடும். மற்ற விளையாட்டுப் போட்டியைப் போல துப்பாக்கி சுடும் போட்டியினை தனியார் அமைப்புகள் நடத்த முடியாது. ரைபில் கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மற்றும் ரைபில் கிளப் மூலமே இந்த போட்டியினை நடத்த முடியும். ரைபில் கிளப்பினை மேம்படுத்தும் பணி 2017 ஜனவரி அல்லது பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்று கூறினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...