ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான குறை நிவர்த்தி முகாம்

கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியப் பலன்கள் இதுவரை கிடைக்காமல் இருந்தால், இது குறித்து தங்கள் குறைகள் மற்றும் எந்த அலுவலர்கள் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக ஓய்வூதிய குறைதீர்ப்பு மாதிரிப் படிவத்தில் எழுதி மனுக்களை இரட்டை பிரதிகளில் கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 09/11/2016க்குள் கிடைக்கும்படி நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஓய்வூதிய குறைதீர்ப்பு மாதிரிப் படிவத்தில் எழுத வேண்டியவை:


1.பெயர் மற்றும் முகவரி :
2.பி.பி.ஓ எண் :
3.ஓய்வு பெற்ற நாள் :
4.கடைசியாக வகித்த பதவி மற்றும் துறை :
5.குறைகள் விவரம் (தனித்தாளில் விரிவாக எழுதி படிவத்தில் இணைக்கவும்) :
6.முந்தைய தகவல் ஏதும் இருப்பின் விவரம் :
7.இது தொடர்பாக வழக்கு ஏதும் தொடர்ந்திருந்தால் அதன் விவரம் :
8.குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலகம் மற்றும் அலுவலர் விவரம் :

மேலும், இதுதொடர்பாக ஓய்வூதியர் குறைகளை நேர்முகக் கூட்டம் வருகிற 15/11/2016 செவ்வாய் அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் காலை 10:30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நேர்முக கூட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...