திண்டுக்கல்லில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை

திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் பாரதிபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பி.மணிமாறன் என்ற வாட்டார் மணி (38). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்து மக்கள் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். பின்னர், இந்து முன்னணி அமைப்பில் இணைந்து மாவட்ட செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மண்டலத் தலைவர் தர்மாவுடன், மணிமாறனுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாரதிபுரத்தில் உள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகம் அருகே திங்கள்கிழமை இரவு மணிமாறன் ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.

அப்போது, இந்து மக்கள் கட்சி நிர்வாகி தர்மா உள்ளிட்ட சிலர், மணிமாறனுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலில் கத்தியால் குத்தப்பட்ட மணிமாறன், அண்ணாநகரில் உள்ள தனது வீட்டை நோக்கி ஓடியுள்ளார். அவரை விடாமல் துரத்தி வந்த 2 நபர்கள், மணிமாறனின் வீட்டு வாசலில் அவரை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். அப்போது, மணிமாறனைக் காப்பாற்ற முயன்ற அவரது மனைவி பிரியாவுக்கும் காயம் ஏற்பட்டது. 

பின்னர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிமாறன் உயிரிழந்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...