ஜம்மு-காஷ்மீரில் தொடரும் பதற்றம்: பள்ளி கட்டடங்களுக்கு தீ

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3 கல்வி நிலைய கட்டடங்களை பிரிவினைவாதிகள் தீ வைத்து எரித்துள்ளது காஷ்மீரில் மீண்டும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ஆம் தேதி, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பர்ஹான் வானி, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஜீலை 9 -ஆம் தேதி முதல் வானியின் ஆதரவாளர்களும், அப்பகுதி இளைஞர்களும் அவ்வப்போது கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் மீது தீ வைத்து வன்முறை மிகுந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் பாதுகாப்பு கருதி பதற்றம் நிறைந்த பகுதிகளில், கடந்த ஜூலை மாதம் 9-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொடர் வன்முறையால் இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இயல்பு நிலை திரும்பியிருந்ததால், கடந்த 110 தினங்களுக்கு மேலாக அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை ஊரடங்கு உத்தரவு அண்மையில் திரும்பப் பெறப்பட்டாலும் அங்கு இன்னும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானி, காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து வானியின் ஆதரவாளர்களும், அப்பகுதி இளைஞர்களும் அவ்வப்போது வன்முறை மிகுந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பள்ளிகளை தொடர்ந்து முடக்கும் விதமாக, பள்ளி கட்டடங்களுக்கு, பிரிவினைவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள், தீ வைத்து எரித்து வருகின்றனர்; கடந்த சில நாட்களில், 20-க்கும் மேற்பட்ட கல்வி நிலைய கட்டடங்கள் தீக்கிறையாக்கப்பட்டுள்ளன. அனந்தநாக் பகுதியில், நேற்று ஒரே நாளில் மட்டும் 3 கல்வி நிலைய கட்டடங்களுக்கு, அடுத்தடுத்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இதனால் காஷ்மீரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதில், கல்வி நிலைய கட்டடங்கள் முழுவதும் சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஜம்மு- காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் இரு தினங்களாக கல்வி நிலைய கட்டடங்களுக்கு தீ வைத்து வருவதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...