எல்லை தாண்டி மீன் பிடிக்கும் விவகாரம் : இந்தியா, இலங்கை நவ.5ம் தேதி பேச்சுவார்த்தை

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி  மீன்பிடிப்பதாக கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், கைது செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பிரச்னை தொடர்பாக, இரு தரப்பு மீனவ பிரதிநிதிகள் 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. இந்நிலையில், இரு தரப்பு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நவம்பர் 5ம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது.

இதில், இலங்கை தரப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா, மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா தலைமையில் 10 பேர் கொண்ட மீனவ சங்கத்தினர் பங்கேற்க, வரும் 2ம் தேதி டெல்லி வர உள்ளதாக இலங்கையின் முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அதில், மீனவர் பிரச்னை தொடர்பாக, அமைச்சர்கள் சமரவீரா, அமரவீரா ஆகியோர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச இருப்பதாகவும், இந்திய, இலங்கை மீனவர் சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...