ஊழியர்களுக்கு கார்களை தீபாவளி பரிசாக வழங்கிய குஜராத் வைர வியாபாரி

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி சவ்ஜி தோலாகியா.

“ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ்” என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர் உலகம் முழுவதும் வைரம் ஏற்றுமதி செய்து வருகிறார்.

வைரம் பட்டை தீட்டும் தொழிலில் புகழ்பெற்ற இவரது தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சிறப்பாக பணிபுரியும் தொழிலாளர்களை இவர் ஆண்டு தோறும் தேர்வு செய்து, வித்தியாசமான முறையில் தீபாவளி போனஸ் பரிசு வழங்குவதை வழக்கத்தில் வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு இவர் தன் ஊழியர்களில் 491 பேருக்கு 491 கார்களை தீபாவளி போனசாக வழங்கினார். 200 பேருக்கு வீடு கொடுத்தார்.




இந்த ஆண்டும் அவர் தன் ஊழியர்களுக்கு வீடுகள், கார்களை தீபாவளி போனசாக கொடுக்க முடிவு செய்தார். இந்த பரிசுகளைப் பெற 1660 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் 400 பேருக்கு வீடு பரிசாக கொடுக்கப்பட்டது. 1260 பேருக்கு கார்களை தீபாவளி போனஸ் பரிசாக வைர வியாபாரி தோலாகியா கொடுத்துள்ளார்.

குஜராத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள துதலா எனும் கிராமத்தில் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த சப்ஜி தோலாகியா சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர். இளம் வயதில் தன் மாமாவிடம் கடன் வாங்கி வைரம் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டார்.

அந்த தொழிலில் கிடைத்த வருமானம் அவரை கோடீசுவரராக உயர்த்தியது. ஓரளவு வசதிகள் வந்ததில் இருந்து அவர் ஆண்டு தோறும் தீபாவளி போனஸ் பரிசு வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு மட்டும் அவர் ரூ.51 கோடிக்கு தீபாவளி போனஸ் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...