இந்திய எல்லை பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதலில் 15 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, நேற்று வீரமரணம் அடைந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஜித்தேந்திர குமாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் கூடுதல் இயக்குனர் அருண் குமார் இன்று பங்கேற்றார்.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் நமது வீரர் குர்னாம் சிங் படுகாயம் அடைந்தது முதல் நமது எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் படையை சேர்ந்த 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என கூறினார்.

எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ளவர்கள் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் எல்லாவகை சவால்களையும் எதிர்கொள்ள நமது வீரர்கள் விழிப்புணர்வுடன் தயார்நிலையில் காத்திருக்கின்றனர் எனவும் அருண் குமார் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...