குட்டியுடன் காட்டுக்குள் செல்ல தயாரான பெண் யானை


கோவை மாவட்டம், பெரியதடாகம் அருகே அமைந்துள்ளது மாங்கரை வனப்பகுதி. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கீழே விழுந்துகிடந்தது. இதனையறிந்த வனத்துறை மருத்துவர்கள் அந்த பெண் காட்டு யானைக்கு சிகிச்சை அளித்துவந்தனர். 

யானையின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அப்பகுதியிலேயே உடல் நலமின்றி படுத்துக்கொண்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 21-ம் தேதியன்று அந்த யானையை வனத்துறையினர் லாரியின் மூலம் சாடிவயல் யானைகள் முகாமிற்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். இதனிடையே, அந்தப் பெண் காட்டு யானை கடந்த 24-ம் தேதியன்று ஆண் குட்டி ஒன்றை ஈன்றது. 

இதைத்தொடர்ந்து, யானைக்கும், யானை குட்டிக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததைத்தொடர்ந்து இரு யானைகளின் உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

எனவே, கும்கி யானைகளின் உதவியுடன் அந்த இரு யானைகளையும் காட்டிற்குள் அனுப்ப வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

வனத்துறையினரின் தொடர் சிகிச்சைக்குப் பின் காட்டு யானையின் உடல்நலம் முன்னேற்றமடைந்து தற்போது குட்டியுடன் காட்டிற்குள் செல்லும் நிகழ்வு வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...