ஆக்கிரமிப்புகளால் அடைபட்டு கிடைக்கும் 'கடலைக்கார சந்து'!


பெரிய அகலமான சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் முன்பும், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பிளாட்பாரங்களிலும் சிறிய அளவில் பெட்டிக்கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்பவர்கள் பற்றி நமக்கு தெரியும். ஆனால் ஒரு குறுகிய சாலையை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் நடக்க கூட இடமில்லாமல் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தை சில வணிகர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

கோவையின் மத்திய பகுதியும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் பக்கவாட்டு பகுதியில் அமைந்துள்ளது, இந்த 'கடலைக்கர சந்து'. சுமார் 15 அடி அகலமே கொண்ட இந்த சாலை,  வணிகர்களின் ஆதிக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி 5 அடிக்கும் குறைவாக மாறியிருப்பது வேதனை. இந்த பகுதி முழுவதும் மின்சாதன பொருட்கள் மொத்த விற்பனை நடை பெற்றுவருகிறது. கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சில்லறை வியாபாரிகள். இங்கு வந்து பொருட்கள் வாங்கிச்செல்கின்றனர். 

வியாபாரிகள் கடலைக்கார சந்தில் மின்சாதன பொருட்களை மொத்த விற்பனை செய்யும் கடைகளை அமைத்தனர்.  வியாபாரிகள் தங்கள் கடைகளை சாலைகளின் விளிம்புகள் வரை கட்டி வியாபாரம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், கடையினுள் வைக்க வேண்டிய பல பொருட்களை காட்சி பொருளாக சாலைகளில் வைத்து ஜோராக விற்பனை செய்து வருகின்றனர். மீதமிருக்கும் குறுகிய இடத்தில் தங்கள் வாகனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள்  நடப்பதற்கே சிரமத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இது குறித்து பலமுறை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டும் மாநகராட்சி நிர்வாகமோ, காவல் துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குமுறுகின்றனர் அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள். கடலைக்கார சந்தின் அருகாமையில், அவிநாசி சாலை மேம்பாலம் உள்ளது இதன் அருகில் அரசின் வாகன நிறுத்தும் இடம் உள்ளது. அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்துவதன் பேரிலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கும் பொருட்டு இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து மாநகராட்சியிடம் புகார் அளிக்க 8190000200 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...