மலேஷியாவில் தீ விபத்து: 3 இந்தியர்கள் பலி

கோலாலம்பூர்: மலேஷியாவில், மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, மூன்று இந்தியர்கள் உட்பட, ஆறு பேர் உடல் கருகி பலியாயினர்.

தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமானோர், குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். அங்குள்ள ஜோஹர் பஹ்ரூவில், சுல்தான் ஷா பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், இரண்டாவது தளத்தில், அவசர சிகிச்சை பிரிவில், நேற்று காலை, திடீரென தீ விபத்து ஏற்பட்டது; அடுத்தடுத்த தளங்களுக்கும், தீ வேகமாக பரவியது.

இதையடுத்து, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளை மீட்கும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டனர்; மற்ற தளங்களில் இருந்த நோயாளிகள், அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தீ விபத்தில் சிக்கி, ஆறு பேர் உயிரிழந்தனர்; அவர்களில், இரு பெண்கள் உட்பட மூன்று பேர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இவர்களது பெயர் விபரம் வெளியிடப்படவில்லை.

மலேஷியாவில் தமிழர்கள் அதிகளவில் வசிப்பதால், பலியானோரில், தமிழர்களும் இருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி, தீயை அணைத்ததுடன், உள்ளே சிக்கியவர்களையும் மீட்டனர்; நோயாளிகள் அனைவரும், வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தீ விபத்து தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு, மலேஷிய பிரதமர் நஜிப் ரசாக் உத்தரவிட்டு உள்ளார்; தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...