விவசாய நிலத்தில் குவிந்துகிடந்த உயிரினங்கள்- விசாரணை



கோவை மாவட்டம், துடியலூர் வட்டத்திற்கு உட்பட்டது பன்னிமடை பஞ்சாயத்து. இப்பகுதியில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்த விவசாய நிலத்தில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் கூறிவந்துள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.

அப்போது விவசாய நிலத்தில் சோதனையிட்டபோது, அங்கிருந்த ஒரு குழியில் பாம்பு மற்றும் மயில்கள் இறந்துகிடப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்தில் சோதனையிட்டனர்.

இதில், அந்தக் குழியில் 2 பாம்புகள், 2 காடைகள், 1 காகம், 10 மயில்கள் இறந்துகிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை இறந்து நீண்ட நாட்கள் ஆனதால் சேதமடைத்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனிடையே, ஒரே குழியில் 10 மயில் உட்பட பல உயிரினங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் விவசாய நில உரிமையாளர் ராஜகோபாலிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...