பரப்பன அக்ரஹாராவா, பட்டாசுடன் கொண்டாட்டமா... எதியூரப்பா மீதான லஞ்ச வழக்கில் இன்று தீர்ப்பு!

பெங்களூரு: முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீதான லஞ்ச வழக்கில் இன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. இது எதியூரப்பாவின் தலைவிதியை மாற்றி எழுதும் என்பதால் எதியூரப்பா ஆதரவாளர்களும், பாஜகவினரும் பெரும் பதைபதைப்புடன் உள்ளனர்.

கர்நாடக முதல்வராக எதியூரப்பா இருந்தபோது தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, தனது இரு மகன்கள், மருமகன் உள்ளிட்ட மேலும் சிலருக்கு சாதகமாக நடந்து கொண்டார் என்பது குற்றச்சாட்டாகும். இதுதொடர்பாக கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி, எதியூரப்பா, இரு மகன்கள், மருமகன், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம், பெல்லாரியைச் சேர்ந்த அதன் நான்கு துணை நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ.

குற்றச்சாட்டு - எதியூரப்பாவின் மகன்கள் ராகவேந்திரா, விஜேந்திரா மற்றும் மருமகன் சோஹன் குமார் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் ரூ. 20 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணமானது 2010ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாத இடைவெளியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இதுபோக எதியூரப்பாவின் மகன்கள் நடத்தி வரும் பிரேர்னா கல்வி அறக்கட்டளைக்கும் ரூ. 20 கோடி நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ. 40 கோடி பணமும், சுரங்க ஒப்பந்த அனுமதி தருவதற்காக எதியூரப்பாவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுத்த லஞ்சப் பணமாகும்.

இந்தப் பணத்தை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் துணை நிறுவனமான செளத் வெஸ்ட் மைனிங் நிறுவனம் வழங்கியுள்ளது. இதுதவிர பெங்களூரு அருகே உள்ள ஒரு ஏக்கர் அரசு நிலத்தை எதியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும், ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்திற்கும் அவர்களது துணை நிறுவனங்களுக்கும் ரூ 20 கோடிக்கு விற்றதாக கணக்குக் காட்டியுள்ளனர். இது ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் எதியூரப்பா குடும்பத்திற்குக் கொடுத்த லஞ்சத்தை மூடி மறைக்க நடந்ததாகும். உண்மையில் இந்த நிலப் பரிவர்த்தனை சட்டவிரோதமாக நடந்துள்ளது. எதியூரப்பா தனது முதல்வர் பதவிக்கான அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்புவெளியாகியுள்ளது. இதில் தண்டிக்கப்பட்டால் எதியூரப்பாவின் அரசியல் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகும். ஏற்கனவே பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் போய் திரும்பிய எதியூரப்பா மீண்டும் சிறைக்குப் போவாரா அல்லது தப்புவாரா என்பது இன்றைய தீர்ப்பில் தெரியவரும்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...