இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் பெண் படையினர்

இந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 100 வீராங்கனைகள், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதியில் முதன்முறையாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அப்படையின் இயக்குநர் கிருஷ்ண சவுத்ரி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இந்த ஆண்டு துவக்கத்தில் பாதுகாப்பு படையை சேர்ந்த பெண்களுக்கு போரிடும் ஆற்றல், ஆயுதங்களைப் பயன்படுத்தும் விதம் மற்றும் மலையேற்றம் குறித்து 44 வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற பெண்கள் சீனாவை ஒட்டிய பகுதிகளான இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இவர்கள் பணியாற்றவுள்ள இடங்கள் கடுமையான பருவநிலை மாற்றம் கொண்டதாகவும், மலைப் பாங்கான நிலப்பரப்பு கொண்டதாகவும் இருக்கும்.

இங்கு அமைந்துள்ள முகாம்கள் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8,000 - 14,000 அடி உயரத்தில் உள்ளன. இதில் உத்தரகண்ட் மாநிலத்தில் இந்திய எல்லையின் கடைசி கிராமமான ‛மனா' மலையில் உள்ள முகாமும் அடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...