மும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதி சுப்ரீம் கோர்ட்டில் தர்கா அறக்கட்டளை பதில்

‘‘மும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதி அளிக்கப்படும்’’ என்று சுப்ரீம் கோர்ட்டில் தர்கா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மும்பை ஒர்லி பகுதியில் கடலுக்கு நடுவே அமைந்துள்ள ஹாஜி அலி தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. 15–ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தர்கா, மும்பை நகரின் முக்கிய அடையாள சின்னமாக திகழ்கிறது. இந்த தர்காவுக்குள் நுழைந்து வழிபாடு நடத்த பெண்களுக்கு கடந்த 2012–ம் ஆண்டு முதல் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் ஜாகியா சோமன் மற்றும் நூர்ஜகான் நியாஸ் ஆகிய இரண்டு பெண்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, ‘‘ஹாஜி அலி தர்காவிற்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் 14, 15, 19 மற்றும் 25 ஆகிய ஷரத்துகளுக்கு எதிரானது என்றும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதாக தர்கா அறக்கட்டளை விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு 6 வார காலம் இடைக்கால தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து, ஹாஜி அலி தர்கா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு
வந்தபோது, ‘‘இந்த விவகாரத்தில் முற்போக்குத்தனமான நிலைப்பாட்டை தர்கா அறக்கட்டளை எடுக்கும்’’ என்று நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அதேநேரத்தில், தர்காவுக்குள் பெண்கள் நுழைவதற்கு ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூத், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தர்கா அறக்கட்டளை தனது முந்தைய நிலைபாட்டை மாற்றிக் கொண்டது. ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்களை அனுமதிக்க தர்கா அறக்கட்டளை ஆர்வத்துடன் இருப்பதாக தர்கா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக கூடுதல் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆண்களுக்கு சமமாக பெண்களும் தர்காவுக்குள் நுழைந்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று வாதிட்ட வக்கீல் கோபால் சுப்பிரமணியம், இதற்கு தேவையான உள்கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், 4 வார காலம் அவகாசம் அளிக்குமாறு கோரினார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தர்கா அறக்கட்டளைக்கு கால அவகாசம் அளித்தனர். அத்துடன் இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...