தனியார் நிறுவனத்தில் 35 லட்சம் மோசடி- விசாரணை


கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், ராமகிருஷ்ணன் என்பவர் மேலாளராக செயல்பட்டு வருகிறார். ராஜேஷ் என்பவர் ஊழியராக உள்ளார். 

இவர்கள் இருவரும் இணைந்து அந்த நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக விளம்பரங்கள் செய்வதாகக் கூறி நிறுவனத்தில் இருந்து 35 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயினை மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து, அந்த நிறுவனத்தில் கணக்காளர் நாராயணன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த மோசடியில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, சாவித்ரி, ஆனந்தகுமார், உஷ்மன் செரிப் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தொடர்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...