அதிகரிக்கும் கஞ்சா விற்பனை- இருவர் கைது


கோவையில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனடிப்படையில், காவல் துறையினரும் பலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை, புலியகுளம் அடுத்த ரெட் ஃபீல்ட்ஸ் சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக இராமநாதபுர காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், அப்பகுதிக்கு விரைந்த துணை காவல் ஆய்வாளர் அன்பரசன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த வாலிபர்கள் புலியகுளம் பகுதியைச் சேர்ந்த அந்தோனி (27) மற்றும் மனோஜ்குமார் (24) என்பது தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்களிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 6 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...