பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்க தயங்க மாட்டோம்: அமெரிக்கா கடும் எச்சரிக்கை

தேவைப்பட்டால் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் தீவிரவாத குழுக்களை தனியாக செயல்பட்டு அழிக்கவும் தயங்க மாட்டோம் என அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்வதைத் தடுக்கும் துறைக்கான செயலாளர் (பொறுப்பு) ஆடம் சுபின் கூறியதாவது:

பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, அந்நாட்டிலிருந்து செயல்படும் அனைத்து தீவிரவாத அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது. குறிப்பாக சில அமைப்புகளை ஊக்குவித்து வருகிறது.

இந்த நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டு அனைத்துத் தீவிரவாத அமைப்புகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதற்கான உதவிகளை செய்யவும் தயாராக உள்ளோம்.

தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடவும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செல்வதைத் தடுக்கவும் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். எனினும், தேவைப்பட்டால், தனியாகவே செயல்பட்டு அங்குள்ள தீவிரவாதக் குழுக்களை அழிக்கவும் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹக்கானி அமைப்பு, ஆப்கானிஸ்தானில் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால், இந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தயங்கி வரும் நிலையில் அமெரிக்கா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...