சிகிச்சைக்குப் பின் குட்டி ஈன்ற காட்டு யானை- வனத்துறையினர் மகிழ்ச்சி

உடல் நலம் பாதிக்கப்பட்டு வனத்துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் காட்டு யானை திங்களன்று ஆண் குட்டியை ஈன்றது.

கோவை, பெரிய தடாகம் அருகே உள்ள வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த பெண் காட்டு யானைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், வயிற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அந்த பெண் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்காக சாடிவயல் யானைகள் முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், திங்களன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் அந்த பெண் யானை ஒரு ஆண் குட்டியை ஈன்றது. இதைத்தொடர்ந்து அந்த இரு யானைகளுக்கும் வனத்துறையினர் சிகிச்சை மற்றும் உணவை வழங்கி பாதுகாத்து வருகின்றனர். 

உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் மீட்கப்பட்ட பெண் காட்டு யானை தற்போது குட்டி ஈன்று நல்லமுறையில் உள்ளதால் அதனை மீட்ட வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் மனோகரன் மற்றும் விஜயராகவன் ஆகியோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...