தமிழ் மாணவர்கள் படுகொலை: யாழ் மாவட்ட செயலக முன்பு மாணவர்கள் போராட்டம்

யாழ்ப்பாணத்திலுள்ள கொக்குவில் பகுதி போலீஸ் சோதனை சாவடி அருகே வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற போது, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச்தைச் மாணவர்கள் இருவர், போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முதலில், அந்த மாணவர்களை தாங்கள் சுட்டுக் கொல்லவில்லை என்றும், சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி இருவரும் உயிரிழந்தததாகவும் போலீஸார் தெரிவித்தனர். ஆனால், பிரேதப் பரிசோதனையின்போது, இரு மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டது உறுதியானது.

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக 5 போலீஸார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தும்படி, அந்நாட்டு காவல்துறை தலைமை ஆய்வாளருக்கு அதிபர் சிறீசேனா உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச்தைச் மாணவர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செயலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களை உள்ளே செல்ல முடியாத அளவிற்கு வெளியே கண்டனப் போரட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...