யானையைப் பார்த்து பீதி - முதாட்டி பலி

வால்பாறை, சிறுகுன்றா டிவிசன் பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி ஈஸ்வரி (68). இருவரும் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமையன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் வெளிப்புறத்தில் சத்தம் கேட்டுள்ளது. ஈஸ்வரி வீட்டின் ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்துள்ளார். அப்போது வெளியில் இருந்த யானை ஒன்று பிளறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஈஸ்வரி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் வால்பாறை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஈஸ்வரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

வால்பாறை பகுதியில் தொடர்ந்து யானைகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் இந்நிலையில், தற்போது யானையால் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...