யானையைப் பார்த்து பீதி - முதாட்டி பலி

வால்பாறை, சிறுகுன்றா டிவிசன் பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி ஈஸ்வரி (68). இருவரும் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமையன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் வெளிப்புறத்தில் சத்தம் கேட்டுள்ளது. ஈஸ்வரி வீட்டின் ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்துள்ளார். அப்போது வெளியில் இருந்த யானை ஒன்று பிளறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஈஸ்வரி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் வால்பாறை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஈஸ்வரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

வால்பாறை பகுதியில் தொடர்ந்து யானைகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் இந்நிலையில், தற்போது யானையால் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...