கோவையில் இரு பெண்கள் மாயம் - விசாரணை

கோவையில் அடுத்தடுத்து இரு கல்லூரி மாணவிகள் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சையத் ரஃபி. இவரது மனைவி தவுலத் விவி. இந்திரா கார்டன் பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு நஷ்ரினா (19) என்ற மகள் உள்ளார். இவருக்கு பெற்றோர்கள் திருமணம் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதற்கு தொடர்ந்து, நஷ்ரினா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற நஷ்ரினா பின் இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர்கள் போத்தனூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் மகபூப் செரிப். இவரது மகள் சாரா சம்சத் (22). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சனிக்கிழமையன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சாரா சம்சத் இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மகபூப் செரிப் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...