கோவையில் இரு பெண்கள் மாயம் - விசாரணை

கோவையில் அடுத்தடுத்து இரு கல்லூரி மாணவிகள் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சையத் ரஃபி. இவரது மனைவி தவுலத் விவி. இந்திரா கார்டன் பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு நஷ்ரினா (19) என்ற மகள் உள்ளார். இவருக்கு பெற்றோர்கள் திருமணம் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதற்கு தொடர்ந்து, நஷ்ரினா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற நஷ்ரினா பின் இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர்கள் போத்தனூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் மகபூப் செரிப். இவரது மகள் சாரா சம்சத் (22). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சனிக்கிழமையன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சாரா சம்சத் இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மகபூப் செரிப் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...