கோவையில் இரு பெண்கள் மாயம் - விசாரணை

கோவையில் அடுத்தடுத்து இரு கல்லூரி மாணவிகள் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சையத் ரஃபி. இவரது மனைவி தவுலத் விவி. இந்திரா கார்டன் பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு நஷ்ரினா (19) என்ற மகள் உள்ளார். இவருக்கு பெற்றோர்கள் திருமணம் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதற்கு தொடர்ந்து, நஷ்ரினா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற நஷ்ரினா பின் இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர்கள் போத்தனூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் மகபூப் செரிப். இவரது மகள் சாரா சம்சத் (22). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சனிக்கிழமையன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சாரா சம்சத் இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மகபூப் செரிப் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...