தொடர் சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறிய பெண் காட்டு யானை

கோவை சாடிவயல் யானைகள் முகாம் பகுதியில் சிகிச்சை அளிக்கப்பட்ட பெண் காட்டு யானை எழுந்து நின்று நடக்க துவங்கியது. தொடர்ந்து இருதினங்கள் யானைக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளதாக வனத்துறை மருத்துவர் மனோகரன் தெரிவித்தார்.

கோவை, பெரிய தடாகம் பகுதியில் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய பெண் காட்டு யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படவே பெண் காட்டு யானையை நேற்றுமாலை சாடிவயல் யானைகள் முகாமிற்கு கொண்டு வந்தனர். சாடிவயல் யானைகள் முகாமில் யானைக்கு வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். யானைக்கு ஆயில் மசாஜ் செய்யப்பட்டதுடன் விட்டமின் மற்றும் ஊட்டச்சத்து மருந்துக்களும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தொடர் சிகிச்சையின் பலனாக இன்று பிற்பகல் காட்டு யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.



இதனையடுத்து கிரேன் உதவியுடன் பெண் காட்டு யானையை வனத்துறை அதிகாரிகள் தூக்கி நிறுத்தினர். எழுந்து நின்ற யானை தண்ணீர் குடித்ததுடன், உணவையும் தானாக உட்கொள்ள துவங்கியது. யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிள்ளதாகவும் தொடர்ந்து இரு தினங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் வனத்துறை மருத்துவர் மனோகரன் தெரிவித்தார். இரு தினங்கள் சிகிச்சைக்கு பின்னரே தானாக உணவு தேடும் அளவிற்கு காட்டுயானையின் உடல் நிலை வலுப்பெறும் எனவும் அதுவரை தொடர்ந்து யானை கண்காணிப்பில் வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். காட்டுயானையின் கால்கள் பெரிய கயிற்றால் கட்டப்பட்டு மரத்தில் கட்டப்பட்டுள்ளது. வனத்துறை மருத்துவர்கள் தொடர்ந்து யானையை கண்காணித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக படுத்த நிலையில் கிடந்த பெண்யானை தானாக உணவு உட்கொள்வதுடன் மெதுவாக நடக்கவும் செய்வதால் வனத்துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...