உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு -ஆட்சித்தலைவர் மேற்பார்வை

கோயம்புத்தூர் சித்தாபுதூர் அரசு மேனிலைப்பள்ளியில் (22.10.2016) இன்று ஆசிரியர் தேர்வு வாரிய மூலம் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பார்வையிட்டார்.

 



இது குறித்து அவர் பேசுகையில்:-

ஆசிரியர் தேர்வு வாரிய மூலம் அரசு பொறியியல் உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு கோயம்புத்தூர் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்விற்காக 6,622 பேர் விண்ணபத்துள்ளார்கள். இதில் இன்று 4,173 பேர் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு பணிக்காக 80 முதல்நிலை கண்காணிப்பு அலுவலர்கள் 375 கண்காணிப்பு அலுவலர்கள் 80 நிலைய அலுவலர்கள் 32 பறக்கும்படை அலுவலர்கள் 126 உதவி பணியாளர்கள் என மொத்தம் 693 அலுவலர்கள் பணிகளை மேற்கொண்டு உள்ளார்கள். இத்தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு எழுதுவோர்க்கு தேவையான குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம் போன்ற அத்தியாசிய தேவைகள் வழங்கப்பட்டதுடன் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு மையத்திற்கும் காவல்துறையின் மூலம் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளனர். எனவே தேர்வு எழுதுவோர் எவ்வித அச்சமும்மின்றி தேர்வு எழுதி பயன்பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...