ஐஏஎஸ் அகாடமியில் தீ விபத்து- ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்


கோவை, காந்திபார்க் அருகே இரண்டடுக்கு மாடிக் கட்டிடத்தில் தனியார் நிறுவனமான கேபிஆர் ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 150க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், வெள்ளியன்று (இன்று) 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த அகாடமியில் தேர்வு மற்றும் பயிற்சி வகுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது, அக்கட்டிடத்தின் அடித்தளத்தில் மின்கசிவு காரணமாக அங்கு வைக்கப்பட்டு இருந்த பட்டாசுப் பெட்டிகளில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. இது அருகில் இருந்த நூலகத்திலும் பரவியதால் அக்கட்டிடத்தில் அடித்தளம் முழுவதும் தீப்பற்ற தொடங்கியது. அதன் மூலம் ஏற்பட்ட புகை காரணமாக முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் பயிற்சி வகுப்பில் இருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேறினர். அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ அணைக்க முன்றனர். கட்டிடத்தில் சக்திவேல், காயத்ரி, விஜயலட்சுமி, அரங்கநாதன், செல்வராஜ் ஆகிய 5 பேர் மட்டும் மேல் தளத்தில் சிக்கிக் கொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, அங்கு வந்த தீயனைப்புத் துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 





இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்திவேல்(23) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்த அப்பகுதிக்கு வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாவட்ட காவல் ஆணையர் அமல்ராஜ் சம்பவ இடத்தினையும், மீட்புப் பணிகளையும் பார்வையிட்டுனர்.







யூபிஎஸ் மின் கருவியில் ஏற்பட்ட மின் கசிவினாலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோவை மாவட்ட தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு அலுவலர் சந்திரன் கூறுகையில்:-

காந்திபார்கில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை தொடர்பாக மாலை 3:45 மணியளவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்தவுடன் அருகில் உள்ள தெற்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் உள்ள தீ அணைப்பு வாகனங்களை அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அருகில் உள்ளவர்கள் தீயை அணைப்பதற்கு போராடி கொண்டிருந்தனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கப்பட்டது. முதலில் தரை தளத்தில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதன் மூலம் ஏற்பட்ட புகை காரணமாக முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் பயிற்சி வகுப்பில் இருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேறினர். அதில் 5 மாணவர்கள் உள்ளே இருப்பதாக தகவல் அறிந்தபின் தீ அணைப்பு வீரர்கள் உள்ளே சென்று அவர்களை மீட்டனர். அவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை மூலமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் 25 தீ அணைப்பு வீரர்கள் மற்றும் 5 அதிகாரிகள் மூலம் தீ அணைப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...