ஐஏஎஸ் அகாடமியில் தீ விபத்து- ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்


கோவை, காந்திபார்க் அருகே இரண்டடுக்கு மாடிக் கட்டிடத்தில் தனியார் நிறுவனமான கேபிஆர் ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 150க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், வெள்ளியன்று (இன்று) 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த அகாடமியில் தேர்வு மற்றும் பயிற்சி வகுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது, அக்கட்டிடத்தின் அடித்தளத்தில் மின்கசிவு காரணமாக அங்கு வைக்கப்பட்டு இருந்த பட்டாசுப் பெட்டிகளில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. இது அருகில் இருந்த நூலகத்திலும் பரவியதால் அக்கட்டிடத்தில் அடித்தளம் முழுவதும் தீப்பற்ற தொடங்கியது. அதன் மூலம் ஏற்பட்ட புகை காரணமாக முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் பயிற்சி வகுப்பில் இருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேறினர். அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ அணைக்க முன்றனர். கட்டிடத்தில் சக்திவேல், காயத்ரி, விஜயலட்சுமி, அரங்கநாதன், செல்வராஜ் ஆகிய 5 பேர் மட்டும் மேல் தளத்தில் சிக்கிக் கொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, அங்கு வந்த தீயனைப்புத் துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 





இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்திவேல்(23) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்த அப்பகுதிக்கு வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாவட்ட காவல் ஆணையர் அமல்ராஜ் சம்பவ இடத்தினையும், மீட்புப் பணிகளையும் பார்வையிட்டுனர்.







யூபிஎஸ் மின் கருவியில் ஏற்பட்ட மின் கசிவினாலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோவை மாவட்ட தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு அலுவலர் சந்திரன் கூறுகையில்:-

காந்திபார்கில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை தொடர்பாக மாலை 3:45 மணியளவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்தவுடன் அருகில் உள்ள தெற்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் உள்ள தீ அணைப்பு வாகனங்களை அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அருகில் உள்ளவர்கள் தீயை அணைப்பதற்கு போராடி கொண்டிருந்தனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கப்பட்டது. முதலில் தரை தளத்தில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதன் மூலம் ஏற்பட்ட புகை காரணமாக முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் பயிற்சி வகுப்பில் இருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேறினர். அதில் 5 மாணவர்கள் உள்ளே இருப்பதாக தகவல் அறிந்தபின் தீ அணைப்பு வீரர்கள் உள்ளே சென்று அவர்களை மீட்டனர். அவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை மூலமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் 25 தீ அணைப்பு வீரர்கள் மற்றும் 5 அதிகாரிகள் மூலம் தீ அணைப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...