மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு: வெளியில் தெரியும் நந்தி சிலை

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிவதால், நீர்பரப்பு பகுதியிலுள்ள நந்தி சிலை, நேற்று பாதிக்கு மேல் வெளியில் தெரிந்தது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணை, பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் மூழ்கியுள்ள, ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்தவ ஆலயத்தின் ஒற்றை கோபுரம் ஆகியவை, நீர்மட்டம் குறையும் போது வெளியே தெரியும். குறிப்பாக, 70 அடியாக சரியும்போது, நந்தி சிலை முகப்பு வெளியில் தெரியும். டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடி நீர் திறப்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிகிறது. நேற்று நீர்மட்டம், 64.65 அடியாகவும், நீர் இருப்பு, 28.27 டி.எம்.சி.,யாகவும் சரிந்ததால், நீர்பரப்பு பகுதியிலுள்ள நந்தி சிலை, பாதிக்கு மேல் வெளியில் தெரிந்தது, விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...