மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு: வெளியில் தெரியும் நந்தி சிலை

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிவதால், நீர்பரப்பு பகுதியிலுள்ள நந்தி சிலை, நேற்று பாதிக்கு மேல் வெளியில் தெரிந்தது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணை, பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் மூழ்கியுள்ள, ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்தவ ஆலயத்தின் ஒற்றை கோபுரம் ஆகியவை, நீர்மட்டம் குறையும் போது வெளியே தெரியும். குறிப்பாக, 70 அடியாக சரியும்போது, நந்தி சிலை முகப்பு வெளியில் தெரியும். டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடி நீர் திறப்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிகிறது. நேற்று நீர்மட்டம், 64.65 அடியாகவும், நீர் இருப்பு, 28.27 டி.எம்.சி.,யாகவும் சரிந்ததால், நீர்பரப்பு பகுதியிலுள்ள நந்தி சிலை, பாதிக்கு மேல் வெளியில் தெரிந்தது, விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...