தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து வழிகள் மாற்றம்


தீபாவளி அக்டோபர் 29ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் உக்கடம், காந்திபுரம் பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் ஆடைகள் வாங்க குவிந்து வருகின்றனர். இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவை மாவட்ட போக்குவரத்துத் துறை சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

அதன்படி, வருகின்ற அக். 29ம் தேதியன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்பணக்கார வீதியில் பொதுமக்கள் அதிகளவில் குவிவதால் பாலக்காடு சாலையில் இருந்து காந்திபுரம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் வருகிற 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை உக்கடத்தில் இருந்து வாலாங்குளம் புறவழிச்சாலை வழியாக கிளாசிக் டவர் சென்று ரயில்நிலையம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

பாலக்காடு சாலையில் இருந்து பூமார்க்கெட் மற்றும் மேட்டுப்பாளையம் சாலை செல்லும் பேருந்துகள் அனைத்தும் உக்கடத்தில் இருந்து பேரூர் புறவழிச்சாலை வழியாக செட்டி வீதி, சலீவன் வீதி, காந்திபார்க், டி.பி.சாலை வழியாகச் சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

அவிநாசி சாலை, திருச்சி சாலை மற்றும் ரயில்நிலையத்திலிருந்து வரும் பேரூர், ஈஷா யோகா, காருண்யா செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாற்றுவழியில் டவுன்ஹால், உக்கடம் காவல் நிலையம் வந்து வலதுபுரம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

ரயில்நிலையத்திலிருந்து டவுன்ஹால் வழியாக காந்திபார்க் மற்றும் மேட்டுப்பாளையம் சாலை செல்லக் கூடிய பேருந்துகள் அனைத்தும் டவுன்ஹால், உக்கடம் வந்து பேரூர் புறவழிச்சாலை வழியாக செட்டிவீதி, சலீவன் வீதி, காந்திபார்க், டி.பி.சாலை வழியாகச் சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

மேலும், ஒப்பணக்கார வீதி, ராஜ வீதிகளில் உள்ள வணிக வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாகனங்களை எக்காரணத்தைக் கொண்டும் பொதுமக்கள் நிறுத்தும் இடங்களில் நிறுத்தக் கூடாது.

பொதுமக்கள் தங்களது இரண்டு சக்கர வாகனங்களை ராஜ வீதி, வைசியாள் வீதியில் ஒருபுறமும், சோளக்கடை முக்கில் உள்ள மாநகராட்சி பார்க்கிங்கிலும் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒப்பணக்கார வீதியில் இரு புறமும் வாகனங்களை நிறுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...