தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து வழிகள் மாற்றம்


தீபாவளி அக்டோபர் 29ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் உக்கடம், காந்திபுரம் பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் ஆடைகள் வாங்க குவிந்து வருகின்றனர். இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவை மாவட்ட போக்குவரத்துத் துறை சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

அதன்படி, வருகின்ற அக். 29ம் தேதியன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்பணக்கார வீதியில் பொதுமக்கள் அதிகளவில் குவிவதால் பாலக்காடு சாலையில் இருந்து காந்திபுரம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் வருகிற 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை உக்கடத்தில் இருந்து வாலாங்குளம் புறவழிச்சாலை வழியாக கிளாசிக் டவர் சென்று ரயில்நிலையம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

பாலக்காடு சாலையில் இருந்து பூமார்க்கெட் மற்றும் மேட்டுப்பாளையம் சாலை செல்லும் பேருந்துகள் அனைத்தும் உக்கடத்தில் இருந்து பேரூர் புறவழிச்சாலை வழியாக செட்டி வீதி, சலீவன் வீதி, காந்திபார்க், டி.பி.சாலை வழியாகச் சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

அவிநாசி சாலை, திருச்சி சாலை மற்றும் ரயில்நிலையத்திலிருந்து வரும் பேரூர், ஈஷா யோகா, காருண்யா செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாற்றுவழியில் டவுன்ஹால், உக்கடம் காவல் நிலையம் வந்து வலதுபுரம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

ரயில்நிலையத்திலிருந்து டவுன்ஹால் வழியாக காந்திபார்க் மற்றும் மேட்டுப்பாளையம் சாலை செல்லக் கூடிய பேருந்துகள் அனைத்தும் டவுன்ஹால், உக்கடம் வந்து பேரூர் புறவழிச்சாலை வழியாக செட்டிவீதி, சலீவன் வீதி, காந்திபார்க், டி.பி.சாலை வழியாகச் சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

மேலும், ஒப்பணக்கார வீதி, ராஜ வீதிகளில் உள்ள வணிக வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாகனங்களை எக்காரணத்தைக் கொண்டும் பொதுமக்கள் நிறுத்தும் இடங்களில் நிறுத்தக் கூடாது.

பொதுமக்கள் தங்களது இரண்டு சக்கர வாகனங்களை ராஜ வீதி, வைசியாள் வீதியில் ஒருபுறமும், சோளக்கடை முக்கில் உள்ள மாநகராட்சி பார்க்கிங்கிலும் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒப்பணக்கார வீதியில் இரு புறமும் வாகனங்களை நிறுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...