தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து வழிகள் மாற்றம்


தீபாவளி அக்டோபர் 29ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் உக்கடம், காந்திபுரம் பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் ஆடைகள் வாங்க குவிந்து வருகின்றனர். இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவை மாவட்ட போக்குவரத்துத் துறை சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

அதன்படி, வருகின்ற அக். 29ம் தேதியன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்பணக்கார வீதியில் பொதுமக்கள் அதிகளவில் குவிவதால் பாலக்காடு சாலையில் இருந்து காந்திபுரம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் வருகிற 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை உக்கடத்தில் இருந்து வாலாங்குளம் புறவழிச்சாலை வழியாக கிளாசிக் டவர் சென்று ரயில்நிலையம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

பாலக்காடு சாலையில் இருந்து பூமார்க்கெட் மற்றும் மேட்டுப்பாளையம் சாலை செல்லும் பேருந்துகள் அனைத்தும் உக்கடத்தில் இருந்து பேரூர் புறவழிச்சாலை வழியாக செட்டி வீதி, சலீவன் வீதி, காந்திபார்க், டி.பி.சாலை வழியாகச் சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

அவிநாசி சாலை, திருச்சி சாலை மற்றும் ரயில்நிலையத்திலிருந்து வரும் பேரூர், ஈஷா யோகா, காருண்யா செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாற்றுவழியில் டவுன்ஹால், உக்கடம் காவல் நிலையம் வந்து வலதுபுரம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

ரயில்நிலையத்திலிருந்து டவுன்ஹால் வழியாக காந்திபார்க் மற்றும் மேட்டுப்பாளையம் சாலை செல்லக் கூடிய பேருந்துகள் அனைத்தும் டவுன்ஹால், உக்கடம் வந்து பேரூர் புறவழிச்சாலை வழியாக செட்டிவீதி, சலீவன் வீதி, காந்திபார்க், டி.பி.சாலை வழியாகச் சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

மேலும், ஒப்பணக்கார வீதி, ராஜ வீதிகளில் உள்ள வணிக வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாகனங்களை எக்காரணத்தைக் கொண்டும் பொதுமக்கள் நிறுத்தும் இடங்களில் நிறுத்தக் கூடாது.

பொதுமக்கள் தங்களது இரண்டு சக்கர வாகனங்களை ராஜ வீதி, வைசியாள் வீதியில் ஒருபுறமும், சோளக்கடை முக்கில் உள்ள மாநகராட்சி பார்க்கிங்கிலும் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒப்பணக்கார வீதியில் இரு புறமும் வாகனங்களை நிறுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...