இந்தியாவில் முதன்முறையாக உடல் உறுப்புதானத்திற்கு புதிய செயலி


இந்தியாவில் முதன்முறையாக கோவையில் தன்வந்திரி மருத்துவ சுற்றுலா சார்பில் நோயாளிகளுக்காக மொபைல் செயலி சேவை தொடங்கப்படுகிறது. இனி வரும் காலாண்டில் பெங்களூர் மற்றும் சென்னையில் இச்சேவை துவங்கப்பட உள்ளது.

தன்வந்திரி மருத்துவ சுற்றுலா சார்பாக இந்தியாவில் சிறந்த மருத்துவ வசதிகள் மற்றும் நம்பகமான உயிர் காக்கும் சுகாதார சேவைகளை வழங்கும் முதல் முயற்சியாக நோயாளிகளுக்கென்றே சிறப்பான மொபைல் செயலியை அறிமுகப்படுத்துகிறது. இந்த சேவை இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் தொடங்கப்படும் மருத்துவ சேவை மற்றும் உடல் உறுப்பு தானத்திற்கான இலவச சேவை ஆகும்.

உடல் நலம் குறித்த அனைத்து விதமான தகவல்களையும், சேவைகளையும் இந்த ஒரே பயன்பாட்டின் மூலம் அறியலாம். 

மேலும் இதில், கோவையில் உள்ள மருத்துவமனைகள், அதன் முகவரி, சிறப்பு சேவை உள்ளிட்டவற்றையும் அறியலாம்.

இதுகுறித்து தன்வந்திரி மருத்துவ சுற்றுலா துணை நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பி.சிவசெந்தூரன் கூறுகையில், இந்தியாவில் தோராயமாக 2 லட்சம் மக்கள் சிறுநீரகம் மற்றும 1 லட்சம் மக்கள் கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான தேவையில் உள்ளனர். ஆனால், இவர்களில் 2 முதல் 3 சதவிகிதத்தினர் மட்டுமே நன்கொடையாளர்கள் கிடைக்கப்பெறுகின்றனர். ஆகவே, இந்த பயன்பாட்டின் மூலம் உடல் ஊறுப்பு தானம் குறித்து தனிநபர்களிடம் விழிப்புணவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். 

மேலும், இதில், 1 ஜிபி வரையிலான மருத்துவ கோப்புகள் குறித்த தகவல்களை இலவசமாக சேமிக்க முடியும்'' என்றார்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...