''வளர்ந்துவரும் பயோமெட்டீரியல்ஸ்''- தேசிய கருத்தரங்கு

கோவை பாரதியார் பல்கலைக் கழக நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் சமூகத்திற்கான பயோமெட்டீரியல்ஸ் மற்றும் செயற்கை உறுப்புகள் நிறுவனம் இணைந்து நடத்தும் ''வளர்ந்துவரும் பயோமெட்டீரியல்ஸ்'' என்ற மூன்று நாள் தேசிய கருத்தரங்கின் துவக்க விழா பல்கலைக் கழக உஷா கீர்த்திலால் மேத்தா அரங்கில் புதனன்று (இன்று) நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் கணபதி தலைமையேற்றார். சமூகத்திற்கான பயோமெட்டீரியல்ஸ் மற்றும் செயற்கை உறுப்புகள் நிறுவனத்தின் தலைவர் சி.பி.சர்மா, பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரும், கங்கா மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் ராஜ சபாபதி, பல்கலைக் கழக பதிவாளர் மோகன் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர். இதில், நானோ அறிவியல் துறை பேராசிரியர் பலமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.



இதனைத்தொடர்ந்து சர்மா, பயோமெட்டீரியல்ஸின் தோற்றம் மற்றும் தேவைகள் குறித்தும், தன் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். இந்த கருத்தரங்கில், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள், பல்வேறு பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள், பாரதியார் பல்கலையைச் சேர்ந்த பல்வேறு துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின் முடிவில் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தலைவர் பொன்பாண்டியன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...