''வளர்ந்துவரும் பயோமெட்டீரியல்ஸ்''- தேசிய கருத்தரங்கு

கோவை பாரதியார் பல்கலைக் கழக நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் சமூகத்திற்கான பயோமெட்டீரியல்ஸ் மற்றும் செயற்கை உறுப்புகள் நிறுவனம் இணைந்து நடத்தும் ''வளர்ந்துவரும் பயோமெட்டீரியல்ஸ்'' என்ற மூன்று நாள் தேசிய கருத்தரங்கின் துவக்க விழா பல்கலைக் கழக உஷா கீர்த்திலால் மேத்தா அரங்கில் புதனன்று (இன்று) நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் கணபதி தலைமையேற்றார். சமூகத்திற்கான பயோமெட்டீரியல்ஸ் மற்றும் செயற்கை உறுப்புகள் நிறுவனத்தின் தலைவர் சி.பி.சர்மா, பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரும், கங்கா மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் ராஜ சபாபதி, பல்கலைக் கழக பதிவாளர் மோகன் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர். இதில், நானோ அறிவியல் துறை பேராசிரியர் பலமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.



இதனைத்தொடர்ந்து சர்மா, பயோமெட்டீரியல்ஸின் தோற்றம் மற்றும் தேவைகள் குறித்தும், தன் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். இந்த கருத்தரங்கில், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள், பல்வேறு பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள், பாரதியார் பல்கலையைச் சேர்ந்த பல்வேறு துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின் முடிவில் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தலைவர் பொன்பாண்டியன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...