இந்து பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் கலவரம்- 250 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

கோவை மாவட்ட இந்து முன்னணியின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்த சசிக்குமார் (36) கடந்த மாதம் 22ம் தேதியன்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் அவ்வமைப்பினரால் கலவரங்கள் ஏற்பட்டன. கடைகள், வாகனங்கள், பேருந்துகள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து சசிக்குமாரின் இறுதி ஊர்வலத்திலும் வாகனங்களுக்கு தீ வைத்து கொழுத்தி கலவரத்தில் ஈடுபட்டனர். இதற்கு போலீஸ் வாகனமும் இரையாகியது.

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, இவர்களுக்கு ஜாமீன் கோரி கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கலவர வழக்கில் கைதான 250 பேருக்கு மட்டும்  நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி பொங்கியப்பன் புதனன்று உத்தரவிட்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...