இந்து பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் கலவரம்- 250 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

கோவை மாவட்ட இந்து முன்னணியின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்த சசிக்குமார் (36) கடந்த மாதம் 22ம் தேதியன்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் அவ்வமைப்பினரால் கலவரங்கள் ஏற்பட்டன. கடைகள், வாகனங்கள், பேருந்துகள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து சசிக்குமாரின் இறுதி ஊர்வலத்திலும் வாகனங்களுக்கு தீ வைத்து கொழுத்தி கலவரத்தில் ஈடுபட்டனர். இதற்கு போலீஸ் வாகனமும் இரையாகியது.

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, இவர்களுக்கு ஜாமீன் கோரி கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கலவர வழக்கில் கைதான 250 பேருக்கு மட்டும்  நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி பொங்கியப்பன் புதனன்று உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...