பிரம்படியால் பெண் கதறல்: பார்த்தவர்கள் கைதட்டி ரசிப்பு

ஆசேஹ்: இந்தோனேஷியாவில், பொதுமக்கள் முன்னிலை யில், பெண்ணுக்கு பிரம்படி வழங்கப்பட்டது. வலி தாங்காமல், அந்த பெண் கதறியதை, வேடிக்கை பார்த்தவர்கள், கைதட்டி ரசித்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், ஆசேஹ் மாகாணம், தன்னாட்சி அதிகாரம் பெற்றது; இங்கு, 'ஷரியத்' சட்டம், கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. சூதாடுவது, மது குடிப்பது, திருமணத்திற்கு முன், ஆணும் பெண்ணும் சுற்றி திரிவது, ஓரினச் சேர்க்கை ஆகியவை, கடுமையான குற்றங்களாக கருதப்படுகின்றன. இந்த குற்றங்களை செய்பவர்களுக்கு, பலர் முன்னிலையில், பிரம்படி வழங்கப்படும்.

இந்நிலையில், ஷரியத் சட்டத்தை மீறிய, 20 முதல், 30 வயதுக்கு உட்பட்ட, ஏழு ஆண்கள், ஆறு பெண்களுக்கு, தலைநகர் பண்டா ஆசேஹில் உள்ள மசூதியில், பலர் முன்னிலையில், 23 பிரம்படி வழங்கப்பட்டது; இதில், ஒரு பெண், வலி தாங்காமல் கதறினார். அதை பார்த்த மற்றவர்கள், கைதட்டி ரசித்தனர்.

''தவறு செய்த ஒரு பெண், கர்ப்பிணி என்பதால், அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை. குழந்தை பெற்ற பின், அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும்,'' என, பண்டா ஆசேஹ் துணை மேயர் ஜைனல் அர்பின் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...