சாலையில் படுத்து உறங்கும் வருங்கால ராணுவ வீரர்கள்!



இந்திய ராணுவத் துறையில் காலியாக உள்ள 24 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் அதற்கான ஆட்சேர்ப்பு முகாம் கோவையில் செயல்பட்டு வரும் பி.ஆர்.எஸ். ராணுவ பயிற்றி மைதானத்தில் புதனன்று (இன்று) அதிகாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதற்காக, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் செவ்வாயன்று இரவு முதலே கோவை பி.ஆர்.எஸ். ராணுவ பயிற்சி மையம் அருகே குவிந்தனர். 



இந்நிலையில், போதுமான பாதுகாப்பு வசதிகளை ராணுவ பயிற்சியாளர்கள் ஏற்படுத்தித் தராததால் அந்த இளைஞர்கள் அனைவரும் பயிற்சி மையத்தின் வெளியே உள்ள அவினாசி சாலையிலேயே படுத்து உறங்கினர்.

சாலை விபத்து, சாலையோரம் உறங்கியவர்கள் மீது வாகனம் ஏறி விபத்து என அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ள நிலையில், ராணுவத்தில் சேர்ந்து நாட்டைப் பாதுகாக்கும் ஆர்வத்துடன் வந்த இளைஞர்களுக்கு எவ்வித பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தித் தராமல் அவர்கள் பிளாட் பாரங்களில் படுத்துரங்கிய காட்சி காண்போரை நெகிழ வைத்தது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...