இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வருமான வரி குறித்து கருத்தரங்கு

இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு (CII) தனது உறுப்பினர்களுக்காக வருமான வரி குறித்து (TDs ) கருத்தரங்கு நடத்தியது. இக்கருத்தரங்கு "பெரு நிறுவன இணைப்பு மற்றும் நேருக்கு நேர் கலந்தாய்வு" என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் வருமான வரித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நேத்ரா ஜெயவர்தனவேலு குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் நடைமுறை சவால்களை பற்றி ஆடிட்டர் கார்த்திகேயன் விளக்கம் அளித்தார். 



பின்னர், வருமான வரி ஆணையாளர் பாலசுப்ரமணியன் வரி பிடிப்பாளர்களின் வரி பிடித்தம், அதன் முக்கியத்துவம் மற்றும் தேவையை பற்றி அவர் பேசுகையில், வரி பிடித்தம் செய்யாமல் கொடுக்கப்படும் தொகையை செலவுகணக்கில் எழுத வருமான வரிச்சட்டம் அனுமதிப்பதில்லை. என்றும் வரிப்பிடித்தம் செய்து அதை அரசாங்கத்திற்கு குறித்த காலத்தில் கட்டாதவர்கள் மீது சிறை தண்டனை என்றும் கூறினார். வரிப்பிடித்தம் செய்த பின் அது உடனடியாக அரசுக்கு சொந்தமானது என்றும் அது வரி பிடிப்பாளர்களின் மற்ற செலவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள கூடாது என்றும் இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.

வருமான வரி துறை இணை ஆணையர் வின்சன்ட் சகாயராஜ், வருமான வரி உதவி ஆணையர் கல்பலதா, வருமான வரி அதிகாரி நாகராஜன் மற்றும் பிற அதிகாரிகள் பல்வேறு சட்டங்கள் மற்றும் (TDs) விதிகள் குறித்து விளக்கினர்.



இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் வருமான வரி பற்றிய கேள்விகளுக்கான விளக்கங்களை பெற்றுக் கொண்டனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...