இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வருமான வரி குறித்து கருத்தரங்கு

இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு (CII) தனது உறுப்பினர்களுக்காக வருமான வரி குறித்து (TDs ) கருத்தரங்கு நடத்தியது. இக்கருத்தரங்கு "பெரு நிறுவன இணைப்பு மற்றும் நேருக்கு நேர் கலந்தாய்வு" என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் வருமான வரித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நேத்ரா ஜெயவர்தனவேலு குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் நடைமுறை சவால்களை பற்றி ஆடிட்டர் கார்த்திகேயன் விளக்கம் அளித்தார். 



பின்னர், வருமான வரி ஆணையாளர் பாலசுப்ரமணியன் வரி பிடிப்பாளர்களின் வரி பிடித்தம், அதன் முக்கியத்துவம் மற்றும் தேவையை பற்றி அவர் பேசுகையில், வரி பிடித்தம் செய்யாமல் கொடுக்கப்படும் தொகையை செலவுகணக்கில் எழுத வருமான வரிச்சட்டம் அனுமதிப்பதில்லை. என்றும் வரிப்பிடித்தம் செய்து அதை அரசாங்கத்திற்கு குறித்த காலத்தில் கட்டாதவர்கள் மீது சிறை தண்டனை என்றும் கூறினார். வரிப்பிடித்தம் செய்த பின் அது உடனடியாக அரசுக்கு சொந்தமானது என்றும் அது வரி பிடிப்பாளர்களின் மற்ற செலவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள கூடாது என்றும் இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.

வருமான வரி துறை இணை ஆணையர் வின்சன்ட் சகாயராஜ், வருமான வரி உதவி ஆணையர் கல்பலதா, வருமான வரி அதிகாரி நாகராஜன் மற்றும் பிற அதிகாரிகள் பல்வேறு சட்டங்கள் மற்றும் (TDs) விதிகள் குறித்து விளக்கினர்.



இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் வருமான வரி பற்றிய கேள்விகளுக்கான விளக்கங்களை பெற்றுக் கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...