ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம்: விசிக-வினர் கைது

கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் முதலில் ஒப்புதல் தெரிவித்த மத்திய அரசு பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றுதான் அமைக்க முடியும் என்று கூறியதுடன், தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வருகிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி திங்கள், செவ்வாய்கிழமை (அக்-17, 18) ஆகிய 2 நாள்கள் 48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து விவசாய சங்கங்களும் அறிவித்திருந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், தமாக, விசிக உள்பட பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று (இன்று) காலை கோவை மாவட்டம், வடகோவை ரயில் நிலையத்தில் மத்திய அரசைக் கண்டித்து விசிக-வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் நேரத்தை மாற்றி ரயில் நிலையத்துக்குள் விடுதலை சிறுத்தை கட்சியினர் நுழைய முற்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...