ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம்: விசிக-வினர் கைது

கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் முதலில் ஒப்புதல் தெரிவித்த மத்திய அரசு பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றுதான் அமைக்க முடியும் என்று கூறியதுடன், தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வருகிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி திங்கள், செவ்வாய்கிழமை (அக்-17, 18) ஆகிய 2 நாள்கள் 48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து விவசாய சங்கங்களும் அறிவித்திருந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், தமாக, விசிக உள்பட பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று (இன்று) காலை கோவை மாவட்டம், வடகோவை ரயில் நிலையத்தில் மத்திய அரசைக் கண்டித்து விசிக-வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் நேரத்தை மாற்றி ரயில் நிலையத்துக்குள் விடுதலை சிறுத்தை கட்சியினர் நுழைய முற்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.





Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...