ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம்: விசிக-வினர் கைது

கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் முதலில் ஒப்புதல் தெரிவித்த மத்திய அரசு பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றுதான் அமைக்க முடியும் என்று கூறியதுடன், தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வருகிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி திங்கள், செவ்வாய்கிழமை (அக்-17, 18) ஆகிய 2 நாள்கள் 48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து விவசாய சங்கங்களும் அறிவித்திருந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், தமாக, விசிக உள்பட பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று (இன்று) காலை கோவை மாவட்டம், வடகோவை ரயில் நிலையத்தில் மத்திய அரசைக் கண்டித்து விசிக-வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் நேரத்தை மாற்றி ரயில் நிலையத்துக்குள் விடுதலை சிறுத்தை கட்சியினர் நுழைய முற்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.





Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...