மாணவர்களின் திறமையை வளர்க்க பார்க் கல்வி நிறுவனத்தில் இன்னோஒலிம்பிக்ஸ் போட்டி


இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாமின் நினைவாக பார்க் கல்வி நிறுவனத்தில் இன்னோஒலிம்பிக்ஸ்- 2016 போட்டி நடைபெறவுள்ளது. இதில் மாணவர்களின் அறிவியல் தொடர்பான திறமைகள், கண்டுபிடிப்புகளை வளர்க்கும் விதத்தில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டிகளின் விபரம் வருமாறு:-

1) அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்காட்சி, 2) வினாடி- வினா, 3) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவியல் தொடர்பான சொற்பொழிவுகள், 4) ஓவியப் போட்டிகள், 5) சைஃபி- அறிவியல் புனைக்கதைகள் ஆகியவை ஆகும்.

இப்போட்டிகளில், அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், வான்வெளி போக்குவரத்து மற்றும் அறிவியல் குறித்தும் மாணவர்களுக்கு கண்காட்சி நடத்தப்பட உள்ளது. 

இந்நிகழ்வில், மாணவர்கள் உருவாக்கிய விமான மாதிரிகள் எவ்வாறு செயல்படுகின்றன எனவும், 100 அடி உயரத்தில் சுமார் 20 நொடிகள் பறக்கக் கூடிய விமான மாதிரியும் இடம்பெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் அறிவியல் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் ரோபோ விளையாட்டுகளும், கண்டுபிடிப்புகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

அப்துல் கலாமின் நினைவாக வரும் அக்டோபர் 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் வெற்றிபெரும் மாணவர்களுக்கு பரிசுக் கோப்பைகளும், பங்குபெரும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. பார்க்குழுமத்தால் நடத்தப்படும் இன்னோஒலிம்பிக் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்க உள்ளது என பார்க் குழுமத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான மேலும் தகவலுக்கு 99655 11155 தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...