பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ராணுவம் நாளை விளக்கம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் (சர்ஜிகல் அட்டாக்) நடத்தியது குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் வெளியுறவுத் துறைச் செயலரும், இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரலும் வரும் 18-ஆம் தேதி விளக்கம் அளிக்கவுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள இந்திய ராணுவ படைப்பிரிவு முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 18-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் பலியாகினர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அதே மாதம் 29-ஆம் தேதி புகுந்து இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலில் பயங்கரவாதிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

எனினும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று அந்நாட்டு ராணுவம் மறுத்து வருகிறது. இதேபோல், இந்தியாவில் உள்ள சில அரசியல் கட்சிகளும் சந்தேகம் எழுப்பின. குறிப்பாக, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், துல்லியத் தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை தரகு வேலை செய்வதாக புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, பாஜக எம்.பி. பி.சி. கந்தூரி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவிடம் ராணுவ துணைத் தளபதி பிபின் ராவத் ஆஜராகி, துல்லியத் தாக்குதல் குறித்து விளக்கினார்.

இந்நிலையில், தில்லியில் வரும் 18-ஆம் தேதி கூடவிருக்கும் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்னிலையில், வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும், ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரலும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளனர்.
இதுகுறித்து மக்களவைச் செயலர் வெளியிட்ட அறிக்கையில், "தில்லியில் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் கூட்டம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையில் வரும் 18-ஆம் தேதி கூடுகிறது. இதில் வெளியுறவுத் துறைச் செயலர், மத்திய உள்துறைச் செயலர், ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல் ஆகியோர் நேரில் ஆஜராகி, துல்லியத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் உறவு குறித்து விளக்கம் அளிக்கவுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...