பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ராணுவம் நாளை விளக்கம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் (சர்ஜிகல் அட்டாக்) நடத்தியது குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் வெளியுறவுத் துறைச் செயலரும், இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரலும் வரும் 18-ஆம் தேதி விளக்கம் அளிக்கவுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள இந்திய ராணுவ படைப்பிரிவு முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 18-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் பலியாகினர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அதே மாதம் 29-ஆம் தேதி புகுந்து இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலில் பயங்கரவாதிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

எனினும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று அந்நாட்டு ராணுவம் மறுத்து வருகிறது. இதேபோல், இந்தியாவில் உள்ள சில அரசியல் கட்சிகளும் சந்தேகம் எழுப்பின. குறிப்பாக, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், துல்லியத் தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை தரகு வேலை செய்வதாக புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, பாஜக எம்.பி. பி.சி. கந்தூரி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவிடம் ராணுவ துணைத் தளபதி பிபின் ராவத் ஆஜராகி, துல்லியத் தாக்குதல் குறித்து விளக்கினார்.

இந்நிலையில், தில்லியில் வரும் 18-ஆம் தேதி கூடவிருக்கும் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்னிலையில், வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும், ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரலும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளனர்.
இதுகுறித்து மக்களவைச் செயலர் வெளியிட்ட அறிக்கையில், "தில்லியில் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் கூட்டம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையில் வரும் 18-ஆம் தேதி கூடுகிறது. இதில் வெளியுறவுத் துறைச் செயலர், மத்திய உள்துறைச் செயலர், ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல் ஆகியோர் நேரில் ஆஜராகி, துல்லியத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் உறவு குறித்து விளக்கம் அளிக்கவுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...