போனஸ் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்த துப்புரவு தொழிலாளர்கள்

கோவை மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழக்கக் கோரி அப்பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இதைத்தொடர்ந்து, அவர்களுடன் வந்த தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத்தின் மாநில ஆலோசகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் 2500க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 6 முதல் 8 வருடம் பணியாற்றி வரும் இவர்களுக்கு மாத ஊதியமாக 6000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மருத்துவக் காப்பீடு உள்ளிட்டு வேறு எவ்வித சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. கடந்த வருடம் இவர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.1000 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதுவும் தீபாவளி முடிந்து பின் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த வருடத்திற்கான தீபாவளி போனஸ் குறித்து இன்னும் பேசப்படவில்லை. எனவே, ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு இந்த வருடம் இரண்டு மாத ஊதியம் போனஸாக வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார். 

இதனிடையே, ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் திடீரென திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...