முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு: பொள்ளாச்சியில் திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு

பொள்ளாச்சி திமுக நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட 20 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக பொள்ளாச்சி நகர்மன்ற 8-ஆவது வார்டு திமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 20 பேர் மீது கவைத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். திமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், திமுக இளைஞரணியிலும் முக்கியப் பொறுப்பில் உள்ளார். 

நவநீதகிருஷ்ணன், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து கடந்த 13-ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பும் விதமாக கவிதையைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கவிதையை ராஜீவ் காந்தி என்பவர் உள்ளிட்ட 20 பேர் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து மகாலிங்கபுரம் காவல் துறையினரிடம் பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவரும், அதிமுக நகரச் செயலாளருமான கிருஷ்ணகுமார் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில், நவநீதகிருஷ்ணன், ராஜீவ் காந்தி உள்ளிட்ட 20 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...