முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு: பொள்ளாச்சியில் திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு

பொள்ளாச்சி திமுக நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட 20 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக பொள்ளாச்சி நகர்மன்ற 8-ஆவது வார்டு திமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 20 பேர் மீது கவைத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். திமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், திமுக இளைஞரணியிலும் முக்கியப் பொறுப்பில் உள்ளார். 

நவநீதகிருஷ்ணன், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து கடந்த 13-ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பும் விதமாக கவிதையைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கவிதையை ராஜீவ் காந்தி என்பவர் உள்ளிட்ட 20 பேர் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து மகாலிங்கபுரம் காவல் துறையினரிடம் பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவரும், அதிமுக நகரச் செயலாளருமான கிருஷ்ணகுமார் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில், நவநீதகிருஷ்ணன், ராஜீவ் காந்தி உள்ளிட்ட 20 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...