இந்து பிரமுகர் கொலையால் பதற்றம்

பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மர்ம நபர்களால் நேற்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பெங்களூருவின் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆர். ருத்ரேஷ் என்பவர், சிவாஜிநகர் சகா பகுதியின் ஆர்எஸ்எஸ் மண்டல தலைவராகவும், ஷிவாஜி நகர் பா.ஜ., செயலாளராகவும் உள்ளார். நேற்று இரவு, அவரது வீடருகே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர்,, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு, தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்து அமைக்களைச் சேர்ந்த பிரமுகர்கள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதால் பெங்களூருவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெங்களூருவின் முக்கியமான 4 இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சிவாஜிநகரில் இந்து அமைப்பினர் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் கேரளாவில் பா.ஜ., பிரமுகர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. காவிரி பிரச்னை தொடர்பான பதற்றம் தணிந்து வருவதால் பெங்களூருவில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையால் மீண்டும் பதற்ற நிலை உருவாகி உள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...