இந்து பிரமுகர் கொலையால் பதற்றம்

பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மர்ம நபர்களால் நேற்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பெங்களூருவின் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆர். ருத்ரேஷ் என்பவர், சிவாஜிநகர் சகா பகுதியின் ஆர்எஸ்எஸ் மண்டல தலைவராகவும், ஷிவாஜி நகர் பா.ஜ., செயலாளராகவும் உள்ளார். நேற்று இரவு, அவரது வீடருகே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர்,, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு, தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்து அமைக்களைச் சேர்ந்த பிரமுகர்கள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதால் பெங்களூருவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெங்களூருவின் முக்கியமான 4 இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சிவாஜிநகரில் இந்து அமைப்பினர் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் கேரளாவில் பா.ஜ., பிரமுகர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. காவிரி பிரச்னை தொடர்பான பதற்றம் தணிந்து வருவதால் பெங்களூருவில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையால் மீண்டும் பதற்ற நிலை உருவாகி உள்ளது.

Newsletter

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...